பனிவிழக் கூடாதா என்ற ஏக்கத்தில்
இரவு வேளையில்
மொட்டைமாடியில் தனிஆளாய் அமர்ந்து
இந்தியன் படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கையில்
தோன்றிய சிறிய நினைவு தான்...
நாளை 'ஜூலை மாதத்தின் முதல் நாள்'
ஒவ்வொரு மாதமும் பிறக்கும் போது
ஏதோ புதிதாய்ப் பிறப்பது போல் தோன்றுகிறது!
மாதத்தின் இறுதி நாளில்
என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி
'இந்த மாதம் முழுவதும் எனக்கு எப்படி இருந்தது என்று?'
பெரும்பாலும் அந்த மாதத்தின் முதல் நாள்
பெரும் சோகத்தில் தான் ஆரம்பிக்கும்!
ஆனால், அந்த மாதம்முடியும் போது
ஒரு மாதத்தைக் கடந்துவிட்டோமென்ற திருப்தி மனதில்....
ஒவ்வொரு மாதமும் என்னைத் தவறாமல்
கண்ணிமைக்குள் வைத்துக் காக்கும் இறைவனுக்கு நன்றியும்...
என்னுடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும்
இனிய வாழ்த்துகளுடன்....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக