வியாழன், 15 ஜூன், 2017

காத்திருத்தலின் கனிவு...

இருபது வருடங்களாய் இல்லை இந்த பதற்றம்...
திடீரென ஏனோ இந்த எதிர்பார்ப்பு?
பார்க்கவில்லை என்றாலும் பேசிவிட்டால் போதும்!
என் தனிமைக்கு இனிமை கிடைத்துவிடும்!
நடந்து செல்லும் பாதையெங்கும்
உன் தடங்கள் தெரிகின்றன!
கண்பார்க்கும் இடமெல்லாம்
உன் பிம்பம் தெரிகின்றது!
தென்றல் காற்றில் உன் வாசம் வருகின்றது!
அலைபேசியின் ஓசை கூட
உன் பேச்சை ஞாபகப்படுத்துகிறது!
ஆனால்...
எதையும் சற்றும் மதிக்காமல்
இருக்கும் 'உன்'
திமிர் தான்....
என்னை இன்னும் காத்திருக்கச் செய்கின்றது!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: