வைரக்கல் பதித்த தங்க நகைகள் தான்
உயர்ந்தவை என்று நினைத்தேனோ?
பெரிய வீட்டில் எல்லா சௌகரியங்களும்
இருப்பது தான் உயர்வென்றேனோ?
உயர்ந்த பதவி வகிப்பதைத்தான்
உயர்ந்ததென்று நினைத்தேனோ?
மற்றவரை அடிமைப்படுத்துவதைத் தான்
உயர்வென்று எண்ணினேனோ?
இல்லை... இல்லை...
'அன்பே' உலகில் உயர்வானது...
எதனாலும் சாதிக்க முடியாததை
அன்பு சாதாரணமாகச் சாதித்துவிடும்...
அன்பைப் பகிர்ந்து வாழ்வோம்!!!
இனிய இரமலான் நல்வாழ்த்துகள்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக