வெள்ளி, 23 ஜூன், 2017

என்னைப் புரிந்து கொள்ளாதவள்!!!

தவறாமல் மற்றவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர்க்கு
தான் என்ன செய்கிறாேம் என்பதே ஒரு அறையில் தனியாக அமர்ந்து
தன்னைப் பற்றி யோசிக்கும் போது தான் புலப்படுகிறது!


அதிலும் நாம் சரியாக நடந்து கொண்டாலும் அதைத் தவறாக
எடுத்துக் கொண்டு நம்முடன் சண்டையிடும் உறவுகள் தான் ஏராளம்!
உண்மையாய் ஒருவரிடம் பழகும் போது தான்
பொய் கூறுவதற்கான சந்தர்பங்கள் பல வருகின்றன!


நம் நிலைமையை எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ளாத
சில உறவுகளை விட்டுச் சில நாட்கள் பிரிந்திருப்பதே நலம்!


காரணமில்லாமல் நீ காயப்படுத்தும் ஒவ்வொரு மனமும்
படும்பாடு நாளை உனக்கு வந்துவிடாதபடி பார்த்துக் கொள்!


என் சோகத்தைப் பகிர்ந்து கொள்ள ஆளே இல்லை என்று
நீ நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த நிமிடங்கள் எல்லாம்
உன்னை நினைத்து சோகத்தில் ஏங்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன்
என்பதை மறந்து விடாதே!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: