மேலிருந்து எல்லாவற்றையும் காணும் வாய்ப்பு
எனக்கு கிடைத்துள்ளது...
எங்கும் பணம் கொடுத்து தான் நான் செல்லவேண்டுமென்ற
அவசியம் கூட கிடையாது!
உலகின் அழகையும்
இயற்கையின் வியப்புகளையும்
பார்த்து இரசிக்கிறேன்!
பலவித மனிதர்களைப் பார்க்கிறேன்!
என்னையும் பலபேர் பார்க்கின்றனர்!
ஒரு மனிதனின் செயல்களால்
அவன்
நல்லவனா கெட்டவனா
என்பதை எங்களால்
புரிந்து கொள்ள முடிகிறது!
நாங்களும் கூட்டமாய்
இங்கு உலவிக் கொண்டு தான்
இருக்கிறோம்!
எங்களில்
பொறாமை இல்லை!
போட்டி இல்லை!
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை!
ஜாதி மதம் இல்லை!
ஏழை பணக்காரன் இல்லை!
நீங்கள்
எங்களை அண்ணாந்து பார்க்கும் போதெல்லாம்
சிரிப்பு தான் வருகிறது!
எத்தனை நாட்கள் தான்
மற்றவரின் உயர்வை மட்டுமே
அண்ணாந்து பார்ப்பீர்கள்?
என்றுதான் நீ உயரப்போகிறாய்
என்று
நான் கேட்பதுனக்கு
கேட்கவில்லையா?
விண்மீன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக