திங்கள், 12 ஜூன், 2017

என் இனியவளுக்கு...

இரண்டு நாட்களுக்கு முன்பு தான்
உன் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்ததுபோலுள்ளது!
அதற்குள் இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன!
உன்னை முதன்முதலாக தூக்கிக் கொஞ்சிய
அதே மகிழ்ச்சி...
இன்று நீ என்னைக் கொஞ்சும் போது அடைகிறேன்!
உன் 'அம்மா' என்ற அழகிய அழைத்தலுக்கே
உன் காலடியில் கிடந்து தவமிருக்க வேண்டும்!
என்ன தான் சில நேரங்களில் உன்னை அடித்தாலும்
மறுபடியும் வந்து 'அம்மா' என்று கொஞ்சும் அழகைக் காணும் போது
உன்னைப் போல் ஆயிரம் குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் போல்
ஒரு துடிப்பு என்னுள்!
என் வயிற்றில் பிறவாத என் அன்புச் செல்லமாய்!
என்றும் என் குழந்தையாய்!
இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: