அநேக முறை உன்னை நோக்கியபின்
எனக்கு மேற்சொன்ன தலைப்பே மறந்துவிட்டது!
நான் என் கடமையைத் தான் செய்கிறேன்
பலனையும் எதிர்பார்க்கவில்லை!
பலன் கிடைக்கவில்லை என்றாலும்
அதில் வருத்தம் இல்லை!
ஆனால்... ஒன்றும் செய்யாமல்...
ஒரு கடமையைக் கூட நிறைவேற்றாமல்
உனக்குக் கிடைக்கும் பலனைப் பார்க்கும் போது தான்
என் கடமையை நான் செய்யத் தவறுகிறேன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக