புதன், 21 ஜூன், 2017

ஆச்சரியத்தில் ஆழ்த்துபவள்...

என் இனிய செல்லம்மா...
நாம் இருவரும் சேர்ந்து இருந்த நேரங்களை விட
சண்டை போட்ட நேரங்கள் அதிகம்!
என் மனம் உன்னை நினைக்கும் தருணம்
என் குறுஞ்செய்திப் பெட்டிக்குள் உன் அழகிய பெயர்...
நீ என்னை நினைக்கும் தருணம்
எனக்கு ஏற்படும் விக்கல்!
இப்படி இருவரின் உள்ளமும் ஒருவரையொருவர்
அறியாமலே ஆழ அன்பு செய்வது
எனக்கு அதிக வியப்பை ஏற்படுத்துகிறது!
இன்று கூட நாம் எதிர்பார்க்காமல்
நடந்த இந்த நிகழ்ச்சி
என்னால் என்றும் மறக்க முடியாது!
என்றும்
உனக்கேற்ற பாரதியாய்...
உன்னை
முழுமையாக அன்பு செய்பவனாய்...
என்றும் இருப்பேன்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: