சனி, 24 ஜூன், 2017

படித்ததில் இரசித்தது!!!

வருவதும் போவதும் இரண்டு
இன்பம்
துன்பம்

வந்தால் போகாதது இரண்டு
புகழ்
பழி

போனால் வராதது இரண்டு
மானம்
உயிர்

தானாக வருவது இரண்டு
இளமை
முதுமை

நம்முடன் வருவது இரண்டு
பாவம்
புண்ணியம்

அடக்க முடியாதது இரண்டு
ஆசை
துக்கம்

தவிர்க்க முடியாத இரண்டு
பசி
தாகம்

நம்மால் பிரிக்க முடியாதது இரண்டு
பந்தம்
பாசம்

அழிவைத் தருவது இரண்டு
பொறாமை
கோபம்

எல்லோருக்கும் சமமானது இரண்டு
பிறப்பு
இறப்பு

திருமுருக கிருபானந்தவாரியார்.

கருத்துகள் இல்லை: