கலங்கிக் கொண்டே இருப்பதற்குப் பதில்
கலங்காமல் இருப்பதற்கான வழியைத் தேடுகிறேன்...
தேடிக் கொண்டே இருப்பதற்குப் பதில்
தேடாமல் இருப்பதற்கான வழியைத் தேடுகிறேன்...
சேர்ந்து கொண்டே இருப்பதற்குப் பதில்
தனித்து இருப்பதற்கான வழியைத் தேடுகிறேன்...
சோர்ந்து கொண்டே இருப்பதற்குப் பதில்
சோர்வைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடுகிறேன்...
தேடிக் கிடைக்காத பொக்கிஷங்கள்
எதுவும் உண்டோ இவ்வுலகில்?
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக