மழலையின் சிரிப்பில்
என்னைக் காணலாம் என்றேன்!
இயற்கையின் எழிலினிலே
நான் இருக்கிறேன் என்றேன்!
பகிர்ந்து வாழும் போது
நான் இருக்கிறேன் என்றேன்!
அன்பின் வடிவில்
நான் இருக்கிறேன் என்றேன்!
ஆறுதல் கிடைக்கும் இடங்களில்
நான் இருக்கிறேன் என்றேன்!
இவற்றில் எந்த இடத்திலும்
என்னைக் கண்டு கொள்ளாத நீ
பணத்திலும், செல்வத்திலும், பெருமையிலும்
கண்டு கொண்டது யாரை?
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக