சனி, 17 ஜூன், 2017

நாட்குறிப்பு...

என்னைப் புரட்டிப் பார்க்கும் போது
உன் முகத்தைக் காண எனக்கு ஆசை!
உன் கண்களில் வழியும் அந்த ஒரு சொட்டுக் கண்ணீர் தான்
என் மொத்த பெருமையையும் எனக்கு உணர்த்துகிறது!
வெறும் காதிதமான என்னை முழுமையானவனாக மாற்றியவள் நீ!
என்னில் நீ எழுதும் போது நான் உன்னவனாக உணர்கிறேன்!
நீ என்னவள் போன்று எனக்குத் தோன்றுகிறது!
உன் மகிழ்ச்சி, துக்கம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும்
உன் நிழலாக இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே!
சில வேளைகளில் நீ என்னைத் தீண்டாமல் இருக்கும் போது
எனக்குள்ளான வலி எனக்கு மட்டுமே தெரியும்!
வருடம் முடிவில் பரன் மேல் வைப்பதற்கு முன்
என் பக்கங்களைப் புரட்டும் உன் தென்றல் கையின் ஈரம்
என் ஒவ்வொரு பக்கத்தையும் பூக்கச் செய்கின்றது!
உன் தரிசனம் காண அனுதினமும் தவமிருக்கிறேன்!
தவறாமல் என்னைத் தழுவி விடு!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: