செவ்வாய், 6 ஜூன், 2017

மதிக்கப்பட வேண்டுமா?

இன்று மாலை, பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் சென்றேன். நிறைய ஏ.டி.எம் களில் பணம் இல்லாத காரணத்தால், தேடிக் கண்டுபிடித்து, சற்று தொலைவில் இருந்த ஒரு ஏ.டி.எம்மைக் கண்டுபிடித்து, அங்கும் கூட்டமாக இருந்ததால், வரிசையில் சென்று நின்றேன். நான் ஏழாவது ஆளாக நின்றிருந்தேன்.

ஒவ்வொருவராக, பொறுமையாக, அனைவரும் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தனர். சிறது நேரத்தில் அங்கு வந்த, ஒரு பெண் காவலாளி, யாரிடமும் எதுவும் கேட்காமல், உள்ளே நுழைந்து, அங்கு பணம் எடுத்துக் கொண்டிருந்தவரிடம், நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, கார்டைத்தேய்த்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

எனக்கு அதைப் பார்த்ததும் கோபம் தான் வந்தது.

நான் அந்த இடத்தில் இருந்திருந்தால், என்னை எடுக்க விட்டிருப்பார்களா?

கட்டாயமாக இல்லை தான்.

அந்த ஆடைக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது!
இதற்குப் பெயர் தான் 'அதிகார துஷ்பிரயோகம்'.

இப்படி அதிகாரத்தில் உள்ளவர்கள் எல்லாம், தானாதிக்கம் கொண்டால் எங்கு செல்லும் இந்த நாடு?

இது உருப்படுவதற்கான வழியா?

எங்கே செல்கிறோம் நாம்?

ஒரு அதிகாரம் நமக்குக் கொடுக்கப்படுகிறதென்றால், அது மற்றவரை அடிமைப்படுத்துவதற்கு அல்ல.

நம் கடமையை இன்னும் சரியாகச் செய்வதற்கு!!!

இதனால் தான் எனக்கு மருத்துவர்களைக் கூட சில நேரங்களில் பிடிப்பதில்லை!

இப்படிப்பட்டவர்களைப் பார்த்து வளரும் இந்த இளைய சமுதாயம் எங்கு முன்னேறப் போகிறது???

கவலைப்படத் தான் முடிகிறது!
குரல் கொடுக்க முடியவில்லை!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: