வியாழன், 22 ஜூன், 2017

தேடிக் கொண்டே...

அருகிலேயே பார்த்துக் கொண்டு இருப்பதைவிட
தூரத்தில் நினைத்துக் கொண்டே இருப்பதில்
சுகம் அதிகம் தான் போலும்!
சந்தித்த நாட்களை எண்ணுவதைவிட
சந்திக்கும் போது அனுபவித்த சந்தோசங்களை
எண்ணி மகிழ்வதுதான் அர்த்தம் தரும்!
நீயின்றி நானில்லை
என்ற பழைய பஞ்சாங்க வாசகங்களைக் கூறாமல்
நீ நீயாய்.... நான் நானாய்...
நாம் இருவரும் நமக்காய் என்று... அழகிய கோட்பாடுகளை
எப்போதும் மனதில் கொண்டு
முழுமையாக அன்பு செய்வது கூட சாத்தியமே!!!
வெகுநாட்கள் பேசாமல் இருந்தும்
கொஞ்சம் கூட அன்பு குறையாமல்
நேற்று பேசியதுபோல நடந்துகொள்ள முடிகிறது இந்த அன்பில்!!!
இடைவிடாமல் சண்டை
இடையிடையே கொஞ்சல்...
எல்லாவற்றையும் தாண்டி
இத்தனை வருடங்கள் ஒரே அன்பின் மழையில் நனைய
தவம் செய்திருக்கத் தான் வேண்டும்!
உங்கள் ஒரே மனமும்...
ஒரே எண்ணமும்...
உங்கள் இருவரையும்...
ஒன்றாய் என்றும் இணைத்திருப்பதாக!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: