சனி, 10 ஜூன், 2017

முடியுமோ?

இனிமையாய் பேசினால் மட்டும்
அன்புள்ளதாய் எண்ணிவிட முடியுமோ?
என்னதான் கோபம் இருந்தாலும்
உன்னைவிட்டுப் போக முடியுமோ?
உன்னைக் கோபப்படுத்தினாலும்
பாசம் குறைய முடியுமோ?
கண்டுகொள்ளாமல் இருந்தாலும்
நினையாமல் இருக்க முடியுமோ?

காதல் மழையைப் பொழிந்தேன் அவள் மேல்...
குடைச் சுவர் கொண்டு காத்துக் கொண்டாள் தன்னை!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: