ஞாயிறு, 11 ஜூன், 2017

தெரிந்து கொண்டேன்...

'பிதா, சுதன், பரிசுத்த ஆவி' என்பது எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்த ஒன்றே.
பிதா என்று சொல்லும் போது நெற்றியில் கை வைப்போம். அதன் அர்த்தம் - தலை, முதன்மையானது மற்றும் உடலின் முக்கியமான பகுதியும் கூட. மண்டை ஓட்டிற்குள் இருக்கும் மூளை தான், நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. பிதாவானவர் நம் முதன்மையானவராக இருந்து, நமக்காகச் சிந்தித்து, செயலாற்றுகிறார்.

சுதன் என்று சொல்லும் போது நெஞ்சில் கை வைப்போம். அதன் அர்த்தம் - மனம். உள்ளத்தின் சிந்தனைகள் அனைத்தையும் அறிந்தவர், நம்முடன் இருந்து, நமக்காகச் செயலாற்றுவார்.

பரிசுத்த ஆவி என்று சொல்லும் போது தோள்பட்டைகளில் கை வைப்போம். தோள் - வலிமை. வலிமை – நாம் செய்யப்போகின்ற செயல்களை ஆசீர்வதித்து, அதைச் செய்வதற்கானத் தெம்பைக் கொடுப்பவர், பரிசுத்த ஆவி.

ஆக, ஒரே இயல்புகளை உடைய, இந்த மூவொரு இறைவனை, நம்மைப் பாதுகாக்க, நம்மை வழிநடத்த, நம்முடன் இருக்க, நாம் ஜெபிப்பது தான் இந்த 'பிதா... சுதன்... பரிசுத்த ஆவியின் பெயராலே... ஆமென்'.

அழகான மறையுரை கொடுத்த அருட்தந்தைக்கு நன்றிகள் பல...

கருத்துகள் இல்லை: