செவ்வாய், 30 மே, 2017

மகிமையிழந்து....

ஒவ்வொரு காய்ந்து போன மலருக்குப் பின்னும் உள்ள சோகம்...
செம்மண்ணிலேயே பரம்பரை பரம்பரையாக
வளர்ந்து வந்த ஒரு அழகான காட்டுச் செடி...
அதன் கிளைகள் தேவைக்கு ஏற்றவாறும்
அதன் இலைகள் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் காட்சி தரும்...
இலைகளின் குளிர்ச்சி தணியும் காலத்தில்
அம்மரத்திற்கு அழகு சேர்ப்பது நாங்கள் தான்!
என்னைத் தூர நின்று பார்ப்பவர்கள் 'ஆ' என்று தான் இரசிப்பார்கள்!
என் அருகில் வந்து பார்ப்பவர்கள் 'என்னுடன் செல்ஃபி' எடுத்துக் கொள்வார்கள்!
இப்படி
என் ஒரு நாள் வாழ்க்கையில்
என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும்
மகிழ்ச்சியைத் தந்துவிட்டு
மகிமையிழந்து கிடக்கிறேன்
தரையில்!!!
இந்த அழகான மலரைப் போல்
தன் வாழ்வையே தியாகமாக்கும்
குணம் தாய்க்கு மட்டுமே!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: