நீ தெரிந்தே தவறு செய்தாலும்
உன்மீதுள்ள அன்பில் சிறுதுளிகூட குறையாது!
நீ கோபமாய் திட்டினாலும்
என் பிள்ளை தானே என்று தாங்கிக் கொள்பவள்!
நீ குறைவாய் மதிப்பிட்டுப் பேசினாலும்
அதையும் பொறுத்துக் கொள்பவள்!
நீ தாழ்வாய் நினைத்து நடத்தினாலும்
உன் காலடிவிட்டு நகர மாட்டாள்!
உனக்காக கணவனைக் கூட விட்டுக் கொடுத்துவிடுவாள்!
உனக்காய் அவள் உதிரத்தையும்...
தன் வாழ்நாள்களையும்...
தன் சுக,துக்கங்களைக் கூடப் பாராமல்
உனக்காய் எல்லாவற்றையும் கொடுத்து...
உன்னைத் தன் கருவிழிக்குள் வைத்துக்
காப்பவள் தான்...
'அம்மா'
என்னைக் கருவில் சுமந்தவளுக்கும்...
என் பிம்பமாய் என்னுடனிருப்பவளுக்கும்...
என்னைத் தன் கருவிழிகளுக்குள் வைத்துக் காக்கும் என் இனிய தாய்க்கும்....
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக