எனக்குத் தெரிகிறது
நான் மகிழ்ச்சியாக இல்லை என்று!
எனக்குத் தெரிகிறது
நான் பரிதவித்துக் கொண்டிருக்கிறேன் என்று!
எனக்குத் தெரிகிறது
நான் பொய்யாகப் புன்னகைக்கிறேன் என்று!
எனக்குத் தெரிகிறது
நான் சரியாகச் சாப்பிடுவதில்லை என்று!
எனக்குத் தெரிகிறது
நான் சரியாக உறங்குவதில்லை என்று!
இவற்றையெல்லாம் எண்ணி
கவலைப்படத் தான் நேரமில்லை!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக