செவ்வாய், 16 மே, 2017

வாழ்வே நீயாக!

கண்கொட்ட விழித்தும் கண்டேன் அல்லேன்
நல்ல காதலை!
எப்படி நுழைந்தாய் என் வாழ்வில்
என் வாழ்வாய்?
கவிதைகள் பல கூறி
கவிழ்க்கவும் தெரியவில்லை!
நகைச்சுவை சில கூறி
சிரிக்க வைக்கவும் தோன்றவில்லை!
உன் உணர்வுக்குள் புகுந்தேன்!

நீயாக மாறினேன்!

நீயாக சிரித்தேன்!

நீயாக சிந்தித்தேன்!

நீயாக நடந்தேன்!

என் எண்ணமெல்லாம் நீயானாய்!

உன் உணர்வில் கலந்து
உன்னை இரசித்த என்னை
என்றும் உதறிவிடாதே!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: