சனி, 27 மே, 2017

வரமா! சாபமா!

பார்த்ததில்லை... பழகியதில்லை!!!
ஒன்றாய்ச் சேர்ந்து ஊர் சுற்றியதில்லை!!!
தெரியாமல் நாமிருவரும்
சந்தித்த நாளைத் தான் தவறாமல்
நினைத்துக் கொண்டிருக்கிறேன் அனுதினமும்!
எப்படியோ பேச வைத்து
இப்படி ஒரு அழகான உறவை
கொடுத்த இறைவனுக்குத் தான் நன்றிகள்!
ஆரம்பத்தில் அலட்டிக்கொண்டது
உண்மை தான் என்றாலும்,
பேசப் பேச உண்மையான அன்பாய் மாறியது!
பொதுவாக யாரிடமும் பேச
ஏற்படவில்லை சலனம் எனக்கு...
உன் நட்பு அந்த எல்லையைத் தாண்ட வைத்தது!
பேசிக் கொண்டே என்னைப் பற்றி எல்லாவற்றையும்
அறிந்து கொண்டாய் விவரமாக!
அறிமுகமே செய்யாமல் என் குடும்பத்துடன்
உனக்கு ஏற்பட்ட உறவு எப்படி?
என்னைப் பற்றி ஆர்வமாய் நீ
அறிந்து கொண்ட விதம்
மெய்சிலிர்க்க வைத்ததென்னை!
என் ஒவ்வொரு செயலிலும்
உன் விமர்சனம் முக்கியமாகப்படுகிறது
இப்போதெனக்கு!
உன் அன்பான பேச்சென்னை
சில நேரங்களில் என் பேச்சிழக்கச் செய்தது!
உன் கபடற்ற உண்மை வழி
என் பாதையை மாற்றிவிடுமோ என்ற பயமெனக்கு!
நீ
தோழனாய்
தம்பியாய்
எவ்வாறிருந்தாலும்....
என் அன்பு குறையாது தான்!
சந்தேகப்பட அவசியமில்லை!
என் குழந்தைப் பருவ நாட்களை எல்லாம்
நான் திரும்பிப்பார்க்க எனக்குதவியது
உன் வேண்டல் தான்!
என்றும்
என்றென்றும்
உன் அன்பில்,

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: