இன்று நான் பார்த்து வியந்த ஒரு நபர் என்றால்,அது என் தாய் மாமன் தான். அவர், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில், உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி வியந்த விசயத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
பொதுவாக, நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். எனக்கும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேனா என்றால், 'இல்லை' என்று தான் பதில் வரும்.
சிலரிடம் சில நாட்கள் பேசுவேன். வேறு சிலரிடம் சில நாட்கள்.. சிலரிடம் பேசுவதே கிடையாது.. சிலரிடம் சில நாட்கள் நன்றாகப் பேசுவேன்.. இப்படிப் பலவிதம் உள்ளது. ஆனால், ஒருவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேனா, இல்லை அவருடன் தொடர்பில் இருக்கிறேனா என்றால், அது கேள்விக் குறி தான்.
சிலர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குக் கூட நேரம் கிடைக்காது. ஆனால், என் மாமா, அவருடன் உரையாடும் ஒவ்வொருவருக்கும் பதில் அளிப்பார்.
தெரிந்தவர், தெரியாதவர், படித்தவர், படிக்காதவர், நல்லவர், கெட்டவர், ஏழை, பணக்காரர் என்றெல்லாம் பார்ப்பதே கிடையாது. அனைவரிடமும் சகஜமாகப் பேசுவார்.
அவர் எப்போதும் போனும் கையுமாகத் தான் இருப்பார். அவரிடம் கேட்பவருக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டே இருப்பார். இது போன்ற பொறுமையும், மற்றவர்களை மதிக்கும் தன்மையும் ஒருசிலருக்கு மட்டும் தான் வரும்.
கண்டிப்பாக எனக்கு வருவதெல்லாம் கொஞ்சம் (இல்லை ரொம்பவே) கஷ்டம் தான்.
இப்படியும், மனிதர்கள், இந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்றால், ஆச்சரியம் தான்!
வாழ்த்துகள் மாமா!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக