திங்கள், 29 மே, 2017

அறிவது கடினம்...

தன்னைத் தானே அறிந்துகொள்வது
கடினமென்று தான் இத்தனை நாட்கள்
நினைத்திருந்தேன்!
ஆனால், நான் மற்றவரைப் பற்றி
எல்லாம் தெரிந்தது போல்
அவரைப்பற்றி மற்றவரிடம் பேசும் போதுதான்
தெரிந்து கொண்டேன்...
என்னையே அறிந்துகொள்ள முடியாத நிலையில்
மற்றவரை நான் எப்படி அறிந்துகொள்ள முடியுமென்று!
அத்தோடு நிறுத்துக்கொண்டேன்!!!
மற்றவரை அறிந்துகொள்வதை அல்ல!!!
அவரைப் பற்றி மற்றவரிடம் பேசுவதை!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: