2015 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். நம் அன்புக்குரியவர்களுக்கு நன்றி கூறத் தகுந்த நேரம். 2015 ஆம் ஆண்டு ஆரம்பித்த முதல் நாள், நான் என் அறையில் ஒரு சார்ட் ஒட்ட வைத்தேன். அதில் எனக்குப் புதிதாக கிடைக்கும் நண்பர்களின் பெயர்களை எழுதி வைத்து, அவர்களுக்காகச் சிறப்பாகச் ஜெபிக்க வேண்டுமென்று முடிவெடுத்தேன். அதில் தற்போது 35 புதிய நண்பர்களின் பெயர்கள் உள்ளன. அதைப் பார்க்கும் பொழுதெல்லாம், என் நண்பர்களுக்காகச் ஜெபிப்பேன். 2016 புதிய ஆண்டில் என் நண்பர்களுக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
இன்று சிறப்பாக என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை விட, என் கஷ்ட நேரங்களில் என்னுடன் இருந்த என் அன்புக்குரிய உறவினர், நண்பர் ஒருவருக்கு நன்றி கூற வேண்டும் என்று நினைக்கிறேன். சிறு வயதிலிருந்தே என்னைப் பற்றித் தெரிந்த ஒருவர். என் ஒரு பிறந்த நாளைக் கூட மறவாமல் எனக்கு வாழ்த்துக் கூறும் என் நண்பர். என்னைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர். என் எண்ணங்களை அறிந்து கொண்டவர். நான் பேசும் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருப்பவர். எனக்கு ஒரு தேவை என்று கூறினால், உடனே அதை நிறைவேற்றித் தர வேண்டுமென்று நினைப்பவர். நான் என்ன கூறினாலும் தலையாட்டி பொம்மை போல் தலை ஆட்டும் இயல்பு கொண்டவர். அவருடைய உடல், உள்ள, ஆன்ம நலனுக்காக இன்று சிறப்பாக இறைவனிடம் வேண்டுகிறேன்.
உங்களுக்கும் நிறைய நண்பர்கள் இருக்கலாம். அவர்களுக்கு நன்றி கூற மறவாதீர்கள்.
உங்கள் அன்புக்குரியவரைத் தேவை இல்லாமல் காயப்படுத்தாதீர்கள்.
அவ்வாறு காயப்படுத்தினால் உடனே மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்.
பிறக்கும் புதிய ஆண்டு நமக்கும், நம் அன்புக்குரியவர்களுக்கும் இனிய ஆண்டாய் அமையட்டும்.
இனிய வணக்கங்களுடன்,
இனியா.
இன்று சிறப்பாக என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை விட, என் கஷ்ட நேரங்களில் என்னுடன் இருந்த என் அன்புக்குரிய உறவினர், நண்பர் ஒருவருக்கு நன்றி கூற வேண்டும் என்று நினைக்கிறேன். சிறு வயதிலிருந்தே என்னைப் பற்றித் தெரிந்த ஒருவர். என் ஒரு பிறந்த நாளைக் கூட மறவாமல் எனக்கு வாழ்த்துக் கூறும் என் நண்பர். என்னைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர். என் எண்ணங்களை அறிந்து கொண்டவர். நான் பேசும் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருப்பவர். எனக்கு ஒரு தேவை என்று கூறினால், உடனே அதை நிறைவேற்றித் தர வேண்டுமென்று நினைப்பவர். நான் என்ன கூறினாலும் தலையாட்டி பொம்மை போல் தலை ஆட்டும் இயல்பு கொண்டவர். அவருடைய உடல், உள்ள, ஆன்ம நலனுக்காக இன்று சிறப்பாக இறைவனிடம் வேண்டுகிறேன்.
உங்களுக்கும் நிறைய நண்பர்கள் இருக்கலாம். அவர்களுக்கு நன்றி கூற மறவாதீர்கள்.
உங்கள் அன்புக்குரியவரைத் தேவை இல்லாமல் காயப்படுத்தாதீர்கள்.
அவ்வாறு காயப்படுத்தினால் உடனே மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்.
பிறக்கும் புதிய ஆண்டு நமக்கும், நம் அன்புக்குரியவர்களுக்கும் இனிய ஆண்டாய் அமையட்டும்.
இனிய வணக்கங்களுடன்,
இனியா.
1 கருத்து:
Thanks
கருத்துரையிடுக