இன்று இந்த ஆண்டின் இறுதி நாள். இன்று, என் மனதிற்குப் பிடித்த ஒரு விசயத்தைப் பற்றி எழுதி, இந்த ஆண்டை நல்ல முறையில் நிறைவு செய்யலாம் என நினைத்தேன். காதணி – தோடு என்று பேச்சு வழக்கில் கூறுவோம். பெண்கள் விரும்பி அணியும் ஒன்று. சிறு வயதிலிருந்தே காதணிகள் மீது ஒரு மோகம். வாங்கி அணிவதை விட, அதைப்பார்த்துக் கொண்டு இருப்பதிலேயே அலாதி பிரியம்.
சிறு குழந்தைகளின் காது மடல்கள் பார்க்க அழகாய் இருக்கும். என் காது மடல்களையே நான் அடிக்கடி பார்த்து இரசிப்பதுண்டு. இதில் அந்தக் காதுகளுக்கு, மேலும் அழகூட்ட காதணி அணிவது பார்ப்பவரைக் கூட கவரும்.
காதணி – காதல் அணி. விரும்பி அணிவது என்று கூட வைத்துக் கொள்ளலாம். நம் அன்புக்குரியவர்களுக்கு, இந்தக் காதணி வாங்கிக் கொடுக்கும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வாங்கிக் கொடுத்த நமக்கும் ஒரு திருப்தி இருக்கும்.
இந்த வருடத்தின் இறுதி நாள் இந்தக் காதணி பற்றிய என் கிறுக்கல்களுடன் நிறைவு செய்கிறேன்.
வருகின்ற புதிய ஆண்டில் ஒரு தொடர்கதை எழுதப் போகிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனியா.
சிறு குழந்தைகளின் காது மடல்கள் பார்க்க அழகாய் இருக்கும். என் காது மடல்களையே நான் அடிக்கடி பார்த்து இரசிப்பதுண்டு. இதில் அந்தக் காதுகளுக்கு, மேலும் அழகூட்ட காதணி அணிவது பார்ப்பவரைக் கூட கவரும்.
காதணி – காதல் அணி. விரும்பி அணிவது என்று கூட வைத்துக் கொள்ளலாம். நம் அன்புக்குரியவர்களுக்கு, இந்தக் காதணி வாங்கிக் கொடுக்கும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வாங்கிக் கொடுத்த நமக்கும் ஒரு திருப்தி இருக்கும்.
இந்த வருடத்தின் இறுதி நாள் இந்தக் காதணி பற்றிய என் கிறுக்கல்களுடன் நிறைவு செய்கிறேன்.
வருகின்ற புதிய ஆண்டில் ஒரு தொடர்கதை எழுதப் போகிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக