இன்றைய அற்புதம்: உடல் ஊனமுற்ற பெண் குணமடைதல் (லூக்கா 13: 10-13)
ஓய்வுநாளில், இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து, உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு, கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு, அப்பெண்ணைக் கண்டு, அருகே அழைத்து, 'அம்மா உமது நோயிலிருந்து, நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்' என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே, அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
நம்மையும் இறைவன் பெயர் சொல்லி அழைத்து, நமக்கு விடுதலை வாழ்வை அருள்கின்றார்.
அவரைப் போற்றிப் புகழ, நாமும் மறக்கக் கூடாது.
இனிய காலை வணக்கம்.
அன்புடன்
இனியாள்.
ஒவ்வொரு வார்த்தையும், மற்றவர்களுக்குச் சொல்லும் போது இனிக்கும். அதை நமது வாழ்வாக்க வேண்டுமென்றால் கசக்கும்.
இன்றைய நாளில் சிறப்பாக...மற்றவர்களுக்காக எழுதுவதில் மட்டும் நின்றுவிடாமல், அதையே என் வாழ்வாக்கவும் முயற்சி செய்கிறேன்.
ஓய்வுநாளில், இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து, உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு, கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு, அப்பெண்ணைக் கண்டு, அருகே அழைத்து, 'அம்மா உமது நோயிலிருந்து, நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்' என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே, அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
நம்மையும் இறைவன் பெயர் சொல்லி அழைத்து, நமக்கு விடுதலை வாழ்வை அருள்கின்றார்.
அவரைப் போற்றிப் புகழ, நாமும் மறக்கக் கூடாது.
இனிய காலை வணக்கம்.
அன்புடன்
இனியாள்.
Today’s thought:
“Never tell an unnecessary lie. The truth has great authority. P.D. James”
இன்றைய நாளில் சிறப்பாக...மற்றவர்களுக்காக எழுதுவதில் மட்டும் நின்றுவிடாமல், அதையே என் வாழ்வாக்கவும் முயற்சி செய்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக