வெள்ளி, 4 டிசம்பர், 2015

புதுமை – 4


இன்றைய அற்புதம் : பேய் பிடித்தவரைக் குணப்படுத்துதல் (லூக்கா 1: 31-37)
இயேசு கப்பற்நாகும் என்ற ஒரு ஊருக்குச் சென்றார். அந்த ஊரின் தொழுகைக் கூடத்தில், தீய ஆவியான பேய் பிடித்திருந்த, ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், 'ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்து விடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்று,உரத்த குரலில் கத்தியது. 'வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ' என்று இயேசு அதனை அதட்டினார். அப்போது, பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல், பேய் அவரை விட்டு வெளியேற்றியது. பேயை,அந்த மனிதரிடமிருந்து விரட்டியதே, இயேசு செய்த அற்புதம்.
இன்றும் நம்மில் குடிகொண்டிருக்கும் அகந்தை,அகம்பாவம், கோபம்,  பொறாமை போன்ற பேய்களை விரட்டி, நம்மையும் புது மனிதர்களாக மாற்ற, இறை இயேசுவிடம் வேண்டுவோம்.

இந்தநாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்
இனியாள்.

கருத்துகள் இல்லை: