இன்றைய அற்புதம் : இயேசு, பேய் பிடித்த சிறுவனின் பிணி தீர்த்தல் (லூக்கா 9: 37-42)
இயேசு, பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். கூட்டத்திலிருந்து ஒருவர், 'போதகரே!என் மகன் மீது, அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன். ஓர் ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. உடனே அவன் அலறுகிறான். வலிப்பு உண்டாகி நுரை தள்ளுகிறான். அது அவனை நொறுக்கிவிடுகிறது. அவனை விட்டு எளிதாகப் போவதில்லை,' என்று உரக்கக் கூறினார். அதற்கு இயேசு, 'உம் மகனை இங்கே கொண்டு வாரும்' என்று அம்மனிதரிடம் கூறினார். அவன் அவரிடம் வந்த போது, பேய் அவனைக் கீழே தள்ளி, வலிப்புண்டாக்கியது. இயேசு, அத்தீய ஆவியை அதட்டி, சிறுவனின் பிணி தீர்த்து, அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார். அப்பொழுது, எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு, மலைத்து நின்றார்கள்.
இன்றைய அற்புதத்தில், பேய் பிடித்த அச்சிறுவன், நேரடியாக இயேசுவிடம் சென்று வேண்டவில்லை. அவனுடைய தந்தை, அவனுக்காக இயேசுவிடம் போய் வேண்டுகிறார்.
பல நேரங்களில், நமக்காக நம் பெற்றோர்களும், நம் அன்புக்குரியவர்களும் விடாமல் இறைவனிடம் வேண்டிக்கொள்வது உண்டு.
அவர்களின் வேண்டுதலும் நிச்சயம் கேட்கப்படும்.
இன்றைய நாளில், நம் பெற்றோர்களுக்காகவும், நம் நண்பர்களுக்காகவும், நம் உறவினர்களுக்காவும் சிறப்பாக இறைவனிடம் வேண்டுவோம்.
நம் உள்ளத்து விருப்பங்களை நிச்சயம் அவர் நிறைவேற்றுவார்.
இனிய காலை வணக்கம்.
அன்புடன்
இனியாள்.
இயேசு, பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். கூட்டத்திலிருந்து ஒருவர், 'போதகரே!என் மகன் மீது, அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன். ஓர் ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. உடனே அவன் அலறுகிறான். வலிப்பு உண்டாகி நுரை தள்ளுகிறான். அது அவனை நொறுக்கிவிடுகிறது. அவனை விட்டு எளிதாகப் போவதில்லை,' என்று உரக்கக் கூறினார். அதற்கு இயேசு, 'உம் மகனை இங்கே கொண்டு வாரும்' என்று அம்மனிதரிடம் கூறினார். அவன் அவரிடம் வந்த போது, பேய் அவனைக் கீழே தள்ளி, வலிப்புண்டாக்கியது. இயேசு, அத்தீய ஆவியை அதட்டி, சிறுவனின் பிணி தீர்த்து, அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார். அப்பொழுது, எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு, மலைத்து நின்றார்கள்.
இன்றைய அற்புதத்தில், பேய் பிடித்த அச்சிறுவன், நேரடியாக இயேசுவிடம் சென்று வேண்டவில்லை. அவனுடைய தந்தை, அவனுக்காக இயேசுவிடம் போய் வேண்டுகிறார்.
பல நேரங்களில், நமக்காக நம் பெற்றோர்களும், நம் அன்புக்குரியவர்களும் விடாமல் இறைவனிடம் வேண்டிக்கொள்வது உண்டு.
அவர்களின் வேண்டுதலும் நிச்சயம் கேட்கப்படும்.
இன்றைய நாளில், நம் பெற்றோர்களுக்காகவும், நம் நண்பர்களுக்காகவும், நம் உறவினர்களுக்காவும் சிறப்பாக இறைவனிடம் வேண்டுவோம்.
நம் உள்ளத்து விருப்பங்களை நிச்சயம் அவர் நிறைவேற்றுவார்.
இனிய காலை வணக்கம்.
அன்புடன்
இனியாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக