இன்றைய அற்புதம் : முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்.
ஒருநாள், இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது சுற்றிலுமுள்ள ஊர்களிலிருந்து வந்திருந்த அனைவரும் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அப்போது, முடக்குவாதமுற்ற ஒருவரைச் சிலர் கட்டிலோடு சுமந்து கொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டு போய், இயேசு முன் வைக்க வழி தேடினர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவரை உள்ளே கொண்டுபோக முடியவில்லை. ஆகையால், அவர்கள் கூரை மேல் ஏறி, ஓடுகளைப் பிரித்து,அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு,அந்த மனிதரைக் குணமாக்கினார்.
இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவரைத் தேடுவோர் அனைவரும் அற்புதத்தைக் கண்டு கொள்வர்.
'என் வாழ்வில் எப்போது அற்புதம் நடக்கும்?' என்று காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இன்று ஒரு இனிய நாளாக இருக்கும்.
இயேசுவின் மீது மட்டும் நம்பிக்கையை வைப்போம்.
நம் வேண்டுதல்களை அவர் நிறைவேற்றுவார்.
இனிய காலை வணக்கம்.
அன்புடன்
இனியாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக