நேற்று இரவு, 'குயின்' என்ற இந்தித் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்ப முதலே, அடுத்து என்ன நடக்கும் என்று ஆச்சரியப்படும் வகையில் இயக்கப்பட்டுள்ளது. திருமணம் நின்றபின், தன் தேனிலவிற்காக எடுத்து வைத்திருந்த டிக்கெட்டில் 'பாரீஸ்' செல்கிறார், கதாநாயகியான அப்பாவி ராணி. அங்கு சென்றபின், அவருக்குக் கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தும், அவர் வாழ்க்கையையே மாற்றிப் போடுகிறது.படம் பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்திலிருந்து, சில நல்ல கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். பெண்ணானவள், ஒரு வட்டம் வரைந்து, அதற்குள் தன்னை அடைத்துக் கொள்ளும் போது, தான் விரும்பும் ஒன்று மட்டுமே, தனக்கு உலகம் என்று நினைத்துக் கொள்வாள். ஆனால், அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து பார்க்கும் போது தான், உலகம் எவ்வளவு பெரியது என்று புரிந்துகொள்வாள்.
வெளி உலகத்தைப் பார்த்த பின், தான் விரும்பியதைக் கூட பெரிதாக நினைப்பதில்லை. தன் இலட்சியம் ஒன்றையே இலக்காகக் கொள்கிறாள். நிறைய பெண்கள், தாங்கள் விரும்பும் துறைகளில் சாதிக்க விரும்புவார்கள். ஆனால், அதற்குத் தடையாக அவள் குடும்பமோ அல்லது உறவுகளோ அமைந்துவிடும்.
பெண்கள், தரமான கல்வி அறிவு பெறவேண்டும் என்பது என் கருத்து. தைரியமானவர்களாகவும், எதையும் எதிர் கொள்ளும் சக்தி உடையவர்களாகவும் இருக்க வேண்டும். அதைப் போல் மகிழ்ச்சியைத் தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க நான் தற்சமயம் எனக்காக கண்டுபிடித்திருக்கும் வழி, 'என்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்வது'.
எனக்குப் பிடித்த விசயங்களில், என் நேரத்தைச் செலவிடுவது.
திரைப்படங்கள் பார்ப்பது. அதைப் பற்றிய நேர்மறைக்கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது.
பெண்ணே....
உனக்கான இன்றைய சிந்தனை:
பாதையில்லாத போதும் உன் சுவடுகளைப் பதிய வை.
அன்புடன்
இனியாள்.
வாழ்க்கையை இனிமையாய் வாழ, இனியாளின் வாழ்த்துகள்.
இந்தப் படத்திலிருந்து, சில நல்ல கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். பெண்ணானவள், ஒரு வட்டம் வரைந்து, அதற்குள் தன்னை அடைத்துக் கொள்ளும் போது, தான் விரும்பும் ஒன்று மட்டுமே, தனக்கு உலகம் என்று நினைத்துக் கொள்வாள். ஆனால், அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து பார்க்கும் போது தான், உலகம் எவ்வளவு பெரியது என்று புரிந்துகொள்வாள்.
வெளி உலகத்தைப் பார்த்த பின், தான் விரும்பியதைக் கூட பெரிதாக நினைப்பதில்லை. தன் இலட்சியம் ஒன்றையே இலக்காகக் கொள்கிறாள். நிறைய பெண்கள், தாங்கள் விரும்பும் துறைகளில் சாதிக்க விரும்புவார்கள். ஆனால், அதற்குத் தடையாக அவள் குடும்பமோ அல்லது உறவுகளோ அமைந்துவிடும்.
பெண்கள், தரமான கல்வி அறிவு பெறவேண்டும் என்பது என் கருத்து. தைரியமானவர்களாகவும், எதையும் எதிர் கொள்ளும் சக்தி உடையவர்களாகவும் இருக்க வேண்டும். அதைப் போல் மகிழ்ச்சியைத் தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க நான் தற்சமயம் எனக்காக கண்டுபிடித்திருக்கும் வழி, 'என்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்வது'.
எனக்குப் பிடித்த விசயங்களில், என் நேரத்தைச் செலவிடுவது.
திரைப்படங்கள் பார்ப்பது. அதைப் பற்றிய நேர்மறைக்கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது.
பெண்ணே....
உனக்கான இன்றைய சிந்தனை:
பாதையில்லாத போதும் உன் சுவடுகளைப் பதிய வை.
அன்புடன்
இனியாள்.
வாழ்க்கையை இனிமையாய் வாழ, இனியாளின் வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக