வியாழன், 3 டிசம்பர், 2015

அன்பு அம்மு!!!

கொஞ்சிக் கொண்டே இருப்பேன்
உன் குட்டிக் கன்னங்களை முத்தமிட்டுக் கொண்டு...
இரசித்துக் கொண்டே இருப்பேன்
உன் பிஞ்சு விரல்களின் தழுவல்களை...
ஏங்கிக் கொண்டே இருப்பேன்
உன் பார்வை என் மீது படுமா என்று...
மயங்கிக் கொண்டே இருப்பேன்
உன் உடை அழகில்...
சிந்தித்துக் கொண்டே இருப்பேன்
உன் சிரிப்பில் எப்போது விழுவேனென்று...
மொத்தத்தில்
உன் முழு அழகில்
மயங்கிய
ஒருத்தி 'நான் மட்டும் தான்' – அன்புடன் இனியாள்.

யாரும் தன்னைப் பற்றித் தானே கவிதை எழுதிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், எனக்கு எழுத வேண்டும் போல் தோன்றியது. என்னைப் பற்றி நானே பெருமிதம் கொள்வதில் என்ன தவறு?


கருத்துகள் இல்லை: