இன்றைய அற்புதம் : பேய் பிடித்தவரைக் குணமாக்குதல் (லூக்கா 11:14)
ஒருநாள் இயேசு, பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார்.
இன்றைய அற்புதமானது, மிகச் சுருக்கமாக பைபிளில் (திருவிவிலியம்) கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அவர் பேய் பிடித்ததற்கு முன்பு, பேசக் கூடியவராக இருந்திருக்கலாம். பேய் பிடித்த பின், பேச்சுத் திறன் அற்றவராக மாறி இருக்கலாம். ஆனால், இன்று யேசு அவரிடமிருந்து பேயை ஓட்டியதும், அவர் பேசஆரம்பித்தார். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு, அளவே இருந்திருக்காது. இறைவனிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுக் கொள்ளும் போது நாமும் அப்படித் தானே?
2015-2016 – ஜீபிலி (யூபிலி) ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள், இதை இந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதியிலிருந்து, 'இரக்கத்தின்'ஆண்டாகக் கொண்டாடுகிறோம்.
இயேசு பெருமானின் புதுமைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், 'இரக்கத்தைப்' பற்றியும் சிந்திப்போம், வருகிற நாட்களில்.
இதைப் பற்றிய விரிவான விளக்கவுரையை, அடுத்த பதிவுகளில் தருகிறேன்.
இந்தப் புதிய வாரம், இறைவன் திருவருளால் நமக்கு என்றும் இனிமையை அள்ளித் தரட்டும்.
நமக்குள் இருக்கும் இனிமையை உணர்வோம்.
வாழ்வை இனிதாக்குவோம்.
இனிய காலைவணக்கம்.
அன்புடன்
இனியாள்.
ஒருநாள் இயேசு, பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார்.
இன்றைய அற்புதமானது, மிகச் சுருக்கமாக பைபிளில் (திருவிவிலியம்) கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அவர் பேய் பிடித்ததற்கு முன்பு, பேசக் கூடியவராக இருந்திருக்கலாம். பேய் பிடித்த பின், பேச்சுத் திறன் அற்றவராக மாறி இருக்கலாம். ஆனால், இன்று யேசு அவரிடமிருந்து பேயை ஓட்டியதும், அவர் பேசஆரம்பித்தார். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு, அளவே இருந்திருக்காது. இறைவனிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுக் கொள்ளும் போது நாமும் அப்படித் தானே?
2015-2016 – ஜீபிலி (யூபிலி) ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள், இதை இந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதியிலிருந்து, 'இரக்கத்தின்'ஆண்டாகக் கொண்டாடுகிறோம்.
இயேசு பெருமானின் புதுமைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், 'இரக்கத்தைப்' பற்றியும் சிந்திப்போம், வருகிற நாட்களில்.
இதைப் பற்றிய விரிவான விளக்கவுரையை, அடுத்த பதிவுகளில் தருகிறேன்.
இந்தப் புதிய வாரம், இறைவன் திருவருளால் நமக்கு என்றும் இனிமையை அள்ளித் தரட்டும்.
நமக்குள் இருக்கும் இனிமையை உணர்வோம்.
வாழ்வை இனிதாக்குவோம்.
இனிய காலைவணக்கம்.
அன்புடன்
இனியாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக