திங்கள், 7 டிசம்பர், 2015

புதுமைகள் – 6, 7

இன்றைய அற்புதங்கள்
6 : கை சூம்பியவரைக் குணமாக்குதல் (லூக்கா 6: 6– 11)
இயேசு வழக்கம் போல், தொழுகைக் கூடத்தில் கற்பித்துக் கொண்டிருந்தார். அங்கே, கை சூம்பிய ஒருவர் இருந்தார். இயேசு, அவரை நோக்கி, 'எழுந்து  நடுவே  நின்று, உம் கையை நீட்டும்' என்றார். அவரும் கையை நீட்டினார். அவருடைய கை நலமடைந்தது.

7 : நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர் பெறுதல் (லூக்கா 7: 11– 17)

ஒரு நாள், இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவர், அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன். அவன் தாயோ, ஒரு கைம்பெண்(விதவை). இயேசு, அவர் மீது பரிவு கொண்டு, அந்தப் பாடையின் அருகில் சென்று, அதைத் தொட்டார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து, பேசத் தொடங்கினார். இயேசு, அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.

மேற்சொன்ன, இரண்டு அதிசயங்களும் இன்று நமக்கு உணர்த்துவது... விசுவசித்தால்(நம்பினால்) இறைவனுடைய வல்லமையை நம்மிலும் உணர முடியும்.
மனிதர்களை நம்புவதை விட, இறைவன் மீது முழு நம்பிக்கை வைப்போம்.
அவர் நம் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.
இனிய காலை வணக்கம்.

கருத்துகள் இல்லை: