இன்றைய புதுமை : இயேசு குணமாக்குதல்
இயேசுவிற்குப் பன்னிரண்டு சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் ஒருவர் தான் பேதுரு. இயேசு, ஒருநாள் இவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது நடந்த அற்புதத்தை ஒரு நாடக வடிவில் கூறினால், நன்றாய் இருக்கும் என நினைக்கிறேன்.
(இயேசு பேதுருவின் வீட்டிற்குள் நுழைகிறார்)
பேதுருவின் மனைவி : வாங்க போதகரே! எப்படி இருக்கீங்க?
இயேசு : ம்ம்.. நான் நன்றாய் இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? வீட்டில் அனைவரும் சுகமா?
பேதுருவின் மனைவி : நான் நலமாய் இருக்கிறேன். என் அம்மா தான் தீராத காய்ச்சலால் வருந்திக் கொண்டு இருக்கிறார்.
இயேசு : அவர் எங்கே இருக்கிறார்?
பேதுருவின் மனைவி : உள்ளே படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருக்கிறார்.
இயேசு : வா போய்ப் பார்க்கலாம்.
(இயேசு, பேதுரு, பேதுருவின் மனைவி மூவரும் படுக்கை அறைக்குள் நுழைகின்றனர். இயேசு, அவரைத் தொட்டு,அவருக்கு சுகம் கொடுக்கிறார். பேதுருவும், அவர் மனைவியும் மகிழ்ச்சியால் இயேசுவைப் புகழ்ந்தனர். பேதுருவின் மாமியார் எழுந்து, இயேசுவிற்குப் பணிவிடை செய்தார்)
இயேசு : ஆஉறா!!! என்ன ஒரு அருமையான சாப்பாடு.நன்றி அம்மா.
பேதுருவின் மாமியார் :அம்மாவிற்கு ஏன் நன்றி?
இயேசு புன்னகைக்கிறார். அவர்களது உரையாடல் தொடர்கிறது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், இயேசுவைப் பார்க்க ஆவலுடன் வருகின்றனர். இயேசுவும் அவர்களுடன் உரையாடுகிறார்.மாலையானதும் இயேசு வீடு திரும்புகிறார்.
ஆக, இன்றைய புதுமை: இயேசு, பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்துகிறார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டதுபோல் உணர்கிறேன். இப்போதிலிருந்தே நண்பர்கள் எல்லாரும் கிறிஸ்துமஸ் குறித்தும், வீட்டில் அமைக்கும் குடில் குறித்தும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
கடந்த நான்கு வருடங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை என்னை மிகவும் பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்வு நடக்கும் மாதமாக மாறிவிட்டது.
இந்த மாதத்தில், நான் மேற்கொள்ளும் ஒறுத்தல்களில், பிறர் மீது கோபப்படக் கூடாததைமுக்கியமாகக் கொள்ள வேண்டும். சட்டென்று கோபம் வருகிறது. இல்லை என்றால் அழுகை வருகிறது. இவை இரண்டையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அன்று பேதுருவின் மாமியாருடைய காய்ச்சலைக் குணமாக்கியவர், என்னுடைய உள்ள நோய்களையும் சீக்கிரம் குணமாக்குவார்.
இனிய காலை வணக்கம்.
அன்புடன்,
இனியாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக