ஞாயிறு, 20 டிசம்பர், 2015

நான் நானாக!

'நம்மில் எத்தனை பேர் நம் விருப்பப்படி வாழ்கிறோம்' என்று நம்மை நாமே கேட்டுப் பார்த்தால், பெரும்பாலான பதில்கள் இப்படித் தான் இருக்கும்....'சில நேரங்களில், என் விருப்பப்படி இருப்பேன். சில நேரங்கள், என் பெற்றோரின் விருப்பப்படியும், என் அன்புக்குரியவர்களின்  விருப்பப்படியும் இருப்பேன்.'
நாம் நாமாக வாழ வேண்டுமென்று நினைப்பது தவறல்ல. ஆனால், சில அனுபவசாலிகள், 'நாம் ஒரு குழுவாக சமுதாயம் (சமூகம்) என்ற பெயரில் வாழ்கிறோம். நான எனக்காக வாழ்வேன் என்பதெல்லாம் முட்டாள்தனம்' என்பார்கள்.

முதலில் தனக்காக முழுமையாக வாழ்வோம். மற்றவருக்காக வாழ, நாம் ஏன் வாழ வேண்டும்? அவர்களே வாழலாமே! இதை நினைக்கும் போது, 'சந்தோஷ் சுப்ரமணியம்' படம் தான் ஞாபகத்திற்கு வரும்.

'நீ எல்லாவற்றிலும் நன்றாய்த் தான் இருக்கிறாய். உன் சுட்டித் தனத்தை மட்டும் குறைந்துக் கொண்டால் நன்றாய் இருக்கும', என்று என் அம்மா என்னிடம் கூறினார். சுட்டித்தனம் என் உடன் பிறந்தது. அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று அவர்களுடன் விவாதம் பண்ணிக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனிச் சிறப்பு என்று ஒன்று இருக்கும். அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.

உனக்கு மழையில் நனைய பிடிக்கிறதா? நனைந்து விடு... யாரைப் பற்றி உனக்கு என்ன கவலை?

பாதையில் செல்லும் போது, அழகான ஒரு ஆடவனைப் பார்க்கத் தோன்றுகிறதா? பார்த்துவிடு...

ரோட்டில் கஷ்டப்படுகிறவருக்கு உதவத் தோன்றுகிறதா? உதவி விடு...

இயற்கையை இரசிக்கத் தோன்றுகிறதா? இரசித்து விடு... அது உன்னை இரசிக்கும்.

நண்பர்களுடன் வெகு நேரம் உரையாடத் தோன்றுகிறதா? அதில் ஒன்றும் தவறில்லை.

இப்படி உனக்குப் பிடித்த ஒவ்வொன்றையும், இரசித்துச் செய்.. மற்றவர்கள் உன்னை ஆழும்படி என்றும் விட்டுவிடாதே..

உன் வாழ்க்கையை நீ தான் வாழ வேண்டும்.. அதுவும் உன் விருப்பப்படி...

இதுவே சரியான தருணம்... உனக்காக நீ வாழ...

யாரும் உன் மகிழ்ச்சியைக் கலைக்க நீ இடம் கொடுக்காதே...

இனிய வணக்கங்களுடன்..
இனியாள்.







கருத்துகள் இல்லை: