மற்றவளைக் கொண்டு
சமன் செய்யத்
துடிக்கும் மனம் தான்
அவனது என்றால்....
அவள் அவனை விட்டுச் சென்றதில் ஒன்றும்
தவறில்லையே!!!
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் கண்களும் இதழ்களும்
என்னைப் பார்க்காமலே
பேசிக் கொண்டிருக்கும்
நான் அருகில்லா நேரங்களில்....
இனியபாரதி.
எங்கிருந்து வருகிறாய்
என்று எண்ணும் போதே
எனக்குள் ஓர் சிலிர்ப்பு...
வந்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி...
என் மீது நீ உரசும்
ஒவ்வொரு நொடியும்
ஏதோ ஒரு சலனம்...
மகிழ்ச்சியும் தருகிறாய்...
குளிர்ச்சியும் தருகிறாய்...
உன்னைப் பின் தொடர
முடியவில்லை என்றாலும்
முழுமையாய் அனுபவிக்கிறேன்
ஒவ்வொரு பொழுதும்...
நீ அழகானவள்...
அமிர்தமானவள்...
ஆசையாய் அள்ளி அணைக்க
ஏக்கமாய் நான் இருக்க
எனக்காய் அடிக்கடி
மின்னல் ஒளி தந்து மகிழ்விக்கிறாய்!!!
இனியபாரதி.