அந்தத் தெரு ஓரம் என்னவோ
அவ்வளவாக
ஒவ்வவில்லை என்றாலும்
அந்த இரவிலும்
எப்படியாவது
அவள் முகம்
காண வேண்டும் என்று
அவன் முகத்தில் இருந்த
ஒரு பதைபதைப்புக்கு மத்தியில்
தெருவில் கடந்து சென்ற
மனிதர்கள்
வாகனங்கள்
எல்லாம்
உணர்த்தி விட்டுச் சென்றது
ஒன்றே ஒன்று தான்...
காத்திருப்பின் பரிசு
"அவமானமும்
வெட்கமும்
என்று"
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக