உன் மீது எப்போதும் உள்ளது தான்...
மோகம்...
அதற்கு மேல்...
நீ தீண்டிச் செல்லும்
ஒரு சில நொடிகள் போதும்
ஒரு யுகம் வாழ...
உன் தீண்டல் மட்டும் உண்மை...
ஆனால் நிரந்தரம் அல்ல...
என்றோ ஒருநாள் வந்துவிட்டு
அப்படி என்ன அவசரம்?
நீ தழுவிச் சென்ற வழியில்
நானும் நடக்கிறேன்
அவள் ஞாபகங்களுடன்....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக