மாதங்களும்
நாட்களும்
எண்ண முடியாதவை...
காரணம் தேடி அலைந்த
ஒரு மனம்
எப்படிப் பிரியலாம் என்று...
காரணம் புரியாமல் தவித்த
இன்னொரு மனம்
பிரிந்துவிடக் கூடாது என்று...
காரணங்களும்
சூழ்நிலைகளும்
பல எழுந்தன
பிரித்துவிட வேண்டுமென்று...
ஆனால்,
எதனாலும் பிரிக்க முடியாதபடி
இறுகக் கட்டி வைத்திருந்தது
"அன்பு"
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக