வெள்ளி, 15 ஜனவரி, 2021

முல்லை...

கருமேகம்...

பச்சை இலைகளைத் தாங்கிய

செம்பழுப்பு நிற மரங்கள்...

சாலையின் பக்கங்களில்

ஆங்காங்கே தேநீர் கடைகள்...

சப்தமில்லா சாலையில்

அவ்வப்போது வாகனங்கள் நகர்ந்தவண்ணம்...

இறுகப் பற்றிக் கொண்டு

ஒரு காதல் ஜோடி

விரைகிறது இரு சக்கர வாகனத்தில்...

கேட்பாரின்றிக் கிடக்கிறது

அந்த "முல்லை மலர்"...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: