வியாழன், 3 ஜூன், 2021

பிரித்துப் பார்க்க முடிகிறது...

வெண்மை என்றொன்று

இருப்பதனால் தான்

கருமையைப் பிரித்துப் பார்க்க முடிகிறது...

சுகவீனம் என்றொன்று

இருப்பதனால் தான்

நலத்தைப் பிரித்துப் பார்க்க முடிகிறது...

ஆசை என்றொன்று

இருப்பதனால் தான்

அன்பைப் பிரித்துப் பார்க்க முடிகிறது...

இனியபாரதி.



கருத்துகள் இல்லை: