புதன், 10 மார்ச், 2021

மழையால் மகிழ்வு...

 எங்கிருந்து வருகிறாய்

என்று எண்ணும் போதே

எனக்குள் ஓர் சிலிர்ப்பு...


வந்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி...

என் மீது நீ உரசும்

ஒவ்வொரு நொடியும் 

ஏதோ ஒரு சலனம்...


மகிழ்ச்சியும் தருகிறாய்...

குளிர்ச்சியும் தருகிறாய்...


உன்னைப் பின் தொடர

முடியவில்லை என்றாலும்

முழுமையாய் அனுபவிக்கிறேன்

ஒவ்வொரு பொழுதும்...


நீ அழகானவள்...

அமிர்தமானவள்...

ஆசையாய் அள்ளி அணைக்க

ஏக்கமாய் நான் இருக்க

எனக்காய் அடிக்கடி 

மின்னல் ஒளி தந்து மகிழ்விக்கிறாய்!!!


இனியபாரதி.

கருத்துகள் இல்லை: