சிறிது நேர இடைவெளி...
மறுபடியும் ஓர் அழகுச் சிரிப்பு...
தொடர்ந்த அவன் வேலைகள்...
வேலைகளின் நடுவில்
அவளின் குட்டி முகம்...
கன்னங்கள் தழுவ,
வேலையும் தொடர...
மழையின் சாரல்...
வீட்டு முற்றத்தோடு
அவள் பாதங்களையும் நனைக்க...
குளிர் காய அலையும் அந்தப் பாதங்களுக்குக் கிடைத்தது
அவன் உள்ளங்கைகள்...
இணையத் துடிக்கும் இதயங்கள் அருகருகில்!!!
மனதிற்கு இதமாய்
ஓய்வு கொள்கிறாள் அவன் தோள்களில்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக