புதன், 6 ஜனவரி, 2021

நொடி கூட....

கடக்க நினைக்கும் சாலையில்

சிக்னல் போட்டு

90 நொடிகள் நிற்கும் போது தான்

ஒவ்வொரு நொடியும்

எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது!!!


விபத்து நடக்காமல் தப்பித்த

ஒரு சில நிமிடம் கழித்து தான்

ஒரு நொடி தாமதித்திருந்தால்

என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது!!!


பாதி வாழ்க்கை வாழ்ந்த பின்

திரும்பிப் பார்த்து

நான் எதுவுமே சாதிக்கவில்லை என்று எண்ணும்போது

எனக்கான நொடிகளை நான் ஏன் இப்படி விரயம் செய்துவிட்டேன் என்று எண்ணத் தோன்றுகின்றது!!!


அன்புக்குரியவர்களின் கருணை கூட

சில நேரங்களில் 

இந்த நொடிப்பொழுதில் மாறி விடுகிறது...

"ஒவ்வொரு நொடியும் வாழ்வின் மாற்றத்திற்கான நொடி..."


இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: