நாளைய தினம், புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்....
அவரின் பெயரைக் கேட்டாலே எனக்கு ஞாபகம் வருவது, அவரின் இந்தச் சின்ன ஜெபம் தான்...
ஒரு சில வரிகளில் முழு வேதமே அடங்கி இருப்பது போன்ற ஒரு உணர்வு...
இதோ உங்களுக்காக!!!!
ஆண்டவரே!!! என்னை அமைதியின் கருவியாக்கியருளும்.
பகை உள்ள இடத்தில் பாசத்தையும்...
மனவேதனை உள்ள இடத்தில் மன்னிப்பையும் ...
ஐயச் சூழலில் விசுவாசத்தையும்...
அவநம்பிக்கை எழுந்த இடத்தில் நம்பிக்கையையும்...
இருள்சூழும் வேளையில் ஒளியையும்...
துயரம் நிறைந்த உள்ளத்தில் மகிழ்ச்சியையும்
வழங்கிட எனக்கு அருள் தரும்.
ஓ!!! தெய்வீகக் குருவே!!!
ஆறுதல் பெறுவதை விட ஆறுதல் அளிக்கவும்...
பிறர் என்னைப் புரிந்து கொள்ள விரும்புவதை விட, பிறரைப் புரிந்து கொள்ளவும்...
அன்பைப் பெற விரும்புவதை விட, பிறருக்கு அன்பை அளிக்கவும் எனக்கு அருள்வீராக!
ஏனெனில்...
கொடுக்கும் பொழுது மிகுதியாகப் பெறுகிறோம்...
மன்னிக்கும் போதுதான் மன்னிப்பை அடைகிறோம்...
இறக்கும் போது தான் முடிவில்லா வாழ்வுக்குப் பிறக்கிறோம்...
எனவே...
சுயநலமற்ற வாழ்வில் அமைதி அடைகிறோம்...
ஆமென்.
புனித பிரான்சிஸ் அசிசியார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக