சனி, 31 மார்ச், 2018

அமிர்தம்....

உலகறிய உன்னை நான்
அன்பு செய்யும்
அந்த நாளுக்காய்
காத்திருப்பேன்
அமிர்தத்தை பெற்றுக்
கொள்ள விளைவது போல்!!

இனியபாரதி.

வெள்ளி, 30 மார்ச், 2018

இறைவன் கொடுத்த...

நான் காலையில் எழுந்து
உம்மைப் புகழ்வதும்...
அந்த நாள் இனிய நாளாய்
அமைய என்னை
ஊக்குவிப்பதும்...
அந்த நாளின்
எல்லா செயல்களையும்
செவ்வனே செய்ய
எனக்கு ஆற்றல்
அளிப்பதும்...
உம் கிருபை தான்.

இனியபாரதி.

வியாழன், 29 மார்ச், 2018

குட்டி தேவதை....

அன்பாய் உன்னைப்
பார்த்துக் கொள்ள...
உன் நிழல் போல்
உன்னுடன் என்றும்...
உனக்கு எல்லாமுமாய்....
எந்நேரமும் கண்ணயராது
உன்னை மட்டுமே
நினைத்துக் கொண்டு...
உன் அடிமையாய்...
உன் அருகில்
என்றும் இருக்கும்...

உன் குட்டி தேவதை....

இனியபாரதி.

புதன், 28 மார்ச், 2018

மாலையின் மஞ்சம்....

இனிய இளந்தென்றல்
இனிதாய் உலா வரும்
உன்னைக் கண்டு
கண் சிமிட்டும் நேரம்....

சூரியகாந்தி பூக்கள் எல்லாம்
உன் வழி நோக்கித்
தன் தலை சாய்த்துக்
காத்திருக்கும்
உன் வருகைக்காய்....

இனியபாரதி.

திங்கள், 26 மார்ச், 2018

உலகை வெல்லப் போகும்...

என்னை வென்றுவிட்டேன்
என்று பெருமிதம்
கொள்ளாதே!!!

கடைசியில் என் அன்பிற்கு முன்
நீ தான் தோற்று நிற்கப்
போகிறாய்....

இனியபாரதி.

ஞாயிறு, 25 மார்ச், 2018

நிறைவான நிஜம்

நீ என் மீது கொண்டிருக்கும்
அன்பை
நான் உணரும் நேரம்...
நீ என் அருகில் இல்லை
என்றாலும்
நீ என்னுடன் இருப்பதாகவே
உணரச் செய்கிறது!!!

இனியபாரதி.

வெள்ளி, 23 மார்ச், 2018

நீர் கொடுத்த பரிசு...

என் வாழ்வில்
நான் என்ன வேண்டினாலும்
எனக்குத் தருபவர்
நீர் ஒருவரே!!!
நானே அறியாமல்
எனக்குள் இருந்த
உமது அன்பு பரிசு....

என் குரல்.

என்றும் உமக்கே சொந்தம்.

இனியபாரதி.

வியாழன், 22 மார்ச், 2018

இருக்கு...

அன்பு இருக்கு...
ஆள் இல்லை....
பாசம் இருக்கு...
பந்தம் இல்லை....
நேசம் இருக்கு...
நண்பர்கள் இல்லை....

இனியபாரதி.

புதன், 21 மார்ச், 2018

செவ்வாய், 20 மார்ச், 2018

உணர்த்தவா!!! உணரவா!!!

பகல் நேரங்களில் அதிக உற்சாகம் கொள்கிறாய்!
இரவில் மிகவும் சோர்ந்து விடுகிறாய்!
தோழமையுடன் சிரித்துப் பேசி மகிழ்கிறாய்!
பகையாளியுடன் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்!
உன் உண்மைத்தன்மையை இழந்து
பிறருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!
என்று தான் நீ உன் வாழ்க்கையை
உனக்காக வாழப்போகிறாய்?
உனக்கு நான் உணர்த்த வேண்டுமா?
இல்லை நீயே உணர்ந்து கொள்வாயா?

இனியபாரதி.

திங்கள், 19 மார்ச், 2018

கருப்பு....

பார்ப்பவரின் கண்ணைப் பறிக்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும்
நான் இல்லாமல் பலரால் ஆடைகளைக் கூடத்
தேர்ந்தெடுக்கத் தெரியாது!!!
பெரிய பெரிய விருந்திற்குக் கூட
என் நிற உடைகளைத் தான் விரும்பி அணிந்து வருவார்கள்!!!
எல்லாருக்கும் பிடித்தவளாய்
அழகில் முதன்மையாய்த் திகழ்கிறேன்!!!

இனியபாரதி.

ஞாயிறு, 18 மார்ச், 2018

உன்னை நோக்கி...

நான் படும் துன்பங்கள் எல்லாம்
பரிசு பெறுவதற்கான
பந்தயம் என்றே நினைக்கிறேன்!!!

இனியபாரதி.

சனி, 17 மார்ச், 2018

ஓர் உண்மை சொன்னால்....

குயிலாக நான் மாறி பல பாடல்கள் பாட...
பாரதியாக நான் மாறி பல கவிதைகள் படைக்க...
கனவாக நான் மாறி பல எண்ணங்களைக் கொடுக்க...
நினைவாக நான் மாறி உன்னுடன் என்றும் இருக்க...
மழையாக நான் மாறி உன்னை நனைக்க...
காயாக நான் மாறி உன் உணவுடன் கலக்க...
பழமாக நான் மாறி உனக்கு இனிமையைக் கொடுக்க...
நிழலாக நான் மாறி உனக்கு இளைப்பாறுதல் கொடுக்க...
கதையாக நான் மாறி உனக்கு சுவாரஸ்யம் கொடுக்க...
இப்படி பல பல கனவுகளைக் கண்டு கொண்டு
உன்னை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும் உன் இனியவனின்
உண்மை நிலையை புரிந்து கொள்ள மாட்டாயா???

இனியபாரதி.

வெள்ளி, 16 மார்ச், 2018

பன்னீர்த் துளிகள்..

ஓரமாய் நான் ஒதுங்க ஆசைப்பட்ட அந்த நொடி

என் காலடிகளில் தெறித்து விழுந்த

உன் அழகிய முத்துத் துளிகள் தான்

நான் இப்படி முத்துக் குளிக்கக் காரணமாகின!!!

உன்னால் எழுந்த மண்வாசம்

என் மன வாசத்தைத் தூண்டி எழுப்புகின்றன!!!

உன்னுடன் சேர்ந்து நடனமாடுகிறேன்!!

உன்னுடன் சேர்ந்து பாடுகிறேன்!!

உன்னுடன் சேர்ந்து ஓடுகிறேன்!!

நீ சேரும் இடத்தைப் பார்த்துக் கொண்டே
கரை ஒதுங்கி நிற்கிறேன்!!!

உன் அடுத்த வருகைக்காய்...

இனியபாரதி.


வியாழன், 15 மார்ச், 2018

தன்னிலை அறிய வைத்த மடந்தை...

அரிய வகை காவியங்களைக் கூடத்
தன் பொன்வாய்மொழியால்
அழகான கவிதைகளாய் மாற்றும்
அந்தக் கயல்விழியாள்!!!
அந்த ஆடவனையே அதிரச்செய்து
அவன் மனதை மென்மையாக்கிவிட்டாள்!!!

இனியபாரதி.

புதன், 14 மார்ச், 2018

தெரிந்து கொண்டவள்...

அவளுக்குத் தெரியும்
யாருடன் எப்படிப் பழக வேண்டும் என்று!
நீ சொல்லித் தான்
அவள் அதை அறிய வேண்டிய
அவசியமில்லை!!!
இனியபாரதி.


செவ்வாய், 13 மார்ச், 2018

வெறுமையைக் காணாதபடி...

அனைத்தையும் சாதித்துவிட்டதாய்
நினைத்துக் கொண்டு
இறுமாப்புடன் இருக்கும்
வேளையில் தான்
நான் ஒன்றையும்
சாதிக்கவில்லை என்பதை
உணர்த்துகின்றீர்!!!
எல்லா சொந்தங்களும்
என்னுடன் இருக்கின்றன
என்று அதீத மகிழ்ச்சியடையும்
தருணத்தில் தான்
என் சொந்தங்கள்
என்னை மதிக்கவில்லை என்பதை
உணர்த்துகின்றீர்!!!
என் நண்பர்கள்
என் மீது உயிருக்குயிராய்
இருக்கின்றனர் என்று
நான் பெருமிதப்படும் போதுதான்
அவர்களுக்கு நான் ஒரு பொருட்டே இல்லை என்பதை
உணர்த்துகின்றீர்!!!
இப்படி என் பல்வேறு சூழ்நிலைகளிலும்
என் நிலையை உணர்த்தி
நான் வெறுமையை உணராதபடி
என்னை வழிநடத்தும் உம்மையே
என்றும் அன்பு செய்து வாழ வரமருளும்!!!

இனியபாரதி.

திங்கள், 12 மார்ச், 2018

அளவுகடந்த அன்பால்...

காக்கையைப் பார்க்கும் போது
அதன் குட்டிக் காகத்தின் மீதுள்ள
பாசம் வியப்பாய் இருக்கும்!!
குரங்குக் கூட்டத்தைப் பார்க்கும் போது
மற்ற குரங்குகளின் மீது
அவை காட்டும் கரிசணை
ஆச்சரியமாய் இருக்கும்!!!
மனிதர்கள் கூட்டத்தை மட்டும்
பார்க்கும் போது
பயமாய் இருக்கும்!!!
அடுத்து யாரைக் கவிழ்க்கலாம்
என்ற திட்டமிடுதல் தான்
நடந்து கொண்டிருக்கும்!!!

இனியபாரதி.

ஞாயிறு, 11 மார்ச், 2018

இரசிக்கக் கூடியதாக...

 நான் விரும்பாத ஒவ்வொன்றையும்
விரும்ப ஒரு மனம் வேண்டுகிறேன்!!!
எனக்குப் பிடிக்காத காரியங்களைச்
செய்யும் ஒவ்வொருவரையும்
மன்னிக்கும் மனம் கேட்கிறேன்!!!
நான் விரும்பி எடுத்துக் கொண்ட ஒன்றை
வேறொருவர் விரும்பும் போது
அவருக்கு அதை விட்டுக் கொடுக்கும்
உள்ளம் கேட்கிறேன்!!!
என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
இரசிக்கக் கூடியதாக மாற
நானே என்னை மாற்றிக் கொள்ள விழைகிறேன்!!!

இனியபாரதி.

சனி, 10 மார்ச், 2018

கவலையால்...

என் கவலையால் ஒன்றையும்
சாதிக்க முடியாது
என்று தெரிந்தும்
என்னால் கவலைப்படாமல்
இருக்க முடியவில்லை!!!
நான் படும் கவலையால்
பிறருக்கு மகிழ்ச்சி
கிடைக்கிறதா என்றால்
அதுவும் இல்லை!!!
என் கவலையால்
என் தோழிக்கு
நல்லது நடக்கிறதா என்றால்
அதுவும் இல்லை!!!
பின் ஏன் கவலைப்படுகிறேன்
என்று எனக்கே தெரியவில்லை!!!!

இனியபாரதி.

விண்ணைத் தாண்டி....

அருகில் இருக்கும் போதோ!
தொலையில் சென்ற போதோ!!!
நினைக்கத் தோன்றவில்லை எனக்கு!!!!
கனவில் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன்
நம் இனிய பொழுதுகளை!!!

இனியபாரதி.



வெள்ளி, 9 மார்ச், 2018

நிதானம்...

நாம் செய்யும் செயல்கள்
திண்ணமாய் அமைய
புத்தியுடன் கூடிய நிதானம் அவசியம்!!!
இல்லையெனில்
எல்லாவற்றிற்கும்
வேதனைப்பட வேண்டியது தான்!!!
இனியபாரதி.

வியாழன், 8 மார்ச், 2018

ஸ்டேட்டஸ்....

சமுதாயத்தில் தம் நிலையை
உயர்த்துவதற்குப் பதில்
வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ்
எண்ணிக்கையை உயர்த்துவதிலேயே
முனைப்பாய் உள்ளனர்
நம் நாட்டு மக்கள்....

இனியபாரதி.

செவ்வாய், 6 மார்ச், 2018

அவள்...

தன்னையே முழுமையாய் தந்து
நாளும் பிறர் நலம் மட்டும் நாடும் அவள்
தன்னைப் பற்றியும்
தன் பிறப்பைப் பற்றியும்
ஒருபோதும் சிந்தித்ததே இல்லை...

'நதி'

இனியபாரதி.

திங்கள், 5 மார்ச், 2018

அன்பு அப்பா...

வார்த்தைகளால் வருணித்துவிடும் அளவிற்கு
உம் அன்பு ஒன்றும்
மிகக் குறுகியது இல்லை!!!
உம் அன்பை நினைக்கும் போது
வானம் ஒன்றும் தூரம் இல்லை!!!
உம் பாசத்தின் முன்
அந்தப் பரமனே மெய்சிலிர்த்துத் தான்
போய் விடுவான்!!!
உம் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
எம் வாழ்க்கையின் பிணிகளைக்
குணமாக்கும் சிறந்த மருந்துகள்!!!
உம் உடல் வலிகளினால்
எம் உள்ளக் கனவுகளை நனவாக்கும்
உம் பரந்த மனம்
வேறுயாருக்கு வரும்
உம்மைத் தவிர!!!
உம் உள்ள வலிகள் என்னவென்று
ஒருபோதும் விசாரித்ததில்லை நானும்!!!
இன்று உணர்கிறேன்...

தாய்மையின் இருமடங்கு பாசத்தை உம்மிடத்தில் கண்டு கண் கலங்குகிறேன்!!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 'அப்பா'!!!

இன்று போல் என்றும், உம் சிறுபுன்னகையுடன்
இன்பமுற்று வாழ வாழ்த்துகள்!!!

இனியபாரதி.

ஞாயிறு, 4 மார்ச், 2018

பெருமை...

நான் உன் உறவு என்பதால்
பெருமை அடைந்தேனே ஒழிய
கர்வம் அல்ல. 
அப்படி நான் கர்வப்பட
அவசியமும் இல்லை...
உன்னைப் பிடிக்கும் என்பதற்காக
ஏதாவது பேசுவது முறையா???

இனியபாரதி.

சனி, 3 மார்ச், 2018

ஏங்கிய பொழுதுகள்....

நான் எதிர்பார்த்த என் பரிசு
கிடைக்கும் என்று ஏங்கிய தருணங்கள்
எல்லாம் எனக்குக் கிடைத்தது
என்னவோ... ஏமாற்றம் மட்டுமே...
ஆனால்... அதன் பிறகு எனக்குக்
கிடைத்தது... நான் எதிர் பார்க்காததை விட சிறந்த பரிசு....

இனியபாரதி.

வெள்ளி, 2 மார்ச், 2018

அரை குறையாக...

அனைத்தையும் அறிந்து கொள்ள
ஆண்டவனாலும் முடியாது...
அதனால் தான் பிடித்தவர்கள்
நம் அன்பைப் புரிந்து கொள்ளாமல்
சீக்கிரம் பிரிந்து விடுகிறார்கள் போல...
இனியபாரதி.

வியாழன், 1 மார்ச், 2018

நானும் அவளைத் தான்...

எனக்கு நேரும் ஒவ்வொன்றிற்கும்
அவளை மட்டுமே குறை சொல்கிறேன்...
என்னை என் வாழ்க்கையை
வாழ விடாமல் தடுக்கிறாள்...
என்னைப் பாட விடாமல்
என் குரல்வளையைப் பிடித்துக்
கொள்கிறாள்...
என்னை ஆட விடாமல்
என் கால்களை முடக்குகிறாள்...
என்னைப் பேச விடாமல்
என் வாயை மூடச் சொல்கிறாள்...
என்னைச் சிந்திக்க விடாமல்
என் எண்ணங்களைச்
சிதறச்  செய்கிறாள்...
என் விருப்பம் போல்
என்னை வாழ விடாமல்
கருத்தாய் காக்கிறாள்...
அவள்
என் ' பிரம்மையானவள்....'

இனியபாரதி.