செவ்வாய், 8 ஜனவரி, 2019

சிந்தனைக்கு...

சில நேரங்களில்
தவறானவர் என்று
நாம் நினைக்கும் சிலர்
பல நேரங்களில்
நல்லவர்களாகவே இருந்திருப்பார்கள்...

அவசரப்பட்டு சண்டையிடுவதும்
அதன் பின்
கண்ணீர் விடுவதும்
மனிதர்களின் வழக்கம் போல!!!

தன் பொருளைக் கூட விட்டுக் கொடுக்கும் பெண்...
எதற்காகவும் தன் கணவனை மட்டும் விட்டுக் கொடுப்பதில்லை...

காலம் தான் எல்லாவற்றிற்கும் மருந்து என்பார்கள்...
காலம் கடந்த பின் மருந்து வேலை செய்யாது...
எதையும் தள்ளிப் போடாமல் அப்போதே செய்து விடுவது நல்லது!!!

காத்திருப்பு காதலில் அவசியம்...
அது அந்தக் காலம்...
இந்தக் காலத்தில் காத்திருக்கிறேன் என்று நீ இருந்தால்...
நாளை அவள் / அவன் உன்னுடன் இல்லை!!!

இனியபாரதி.




கருத்துகள் இல்லை: