என் சகோதரன் தங்கம்திரு அவர்களின் அருமையான வரிகள்...
அக்காவின் பிறந்த நாள் அன்று....
உன் கவிதைக்கு கருமேகம் கூட மழை பொழிவும்.
தேனீ எவ்வளவு துன்பம் வந்தாலும்
அனைவருக்கும் இனிப்பான தேன் மட்டும் தரும்...
அது போலத் தான் உன் குணமும்...
குழந்தை போல் மனமும்....
தாய் போல் அன்பு கொண்ட அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இருள் சூழ்ந்த வானில் மின்னி கொண்டு இருக்கும் நட்சத்திரம் போல...
அதிகாலை வேளையில் புல்வெளியின் மேல் காணும் பனி நீர் போல....
மதிய வேளையில் சுட்டு எரிக்கும் சூரியனை மறைத்த மேகம் போல...
மேகம் தந்த மழை போல...
மழை தந்த மண் வாசம் போல...
மண் தந்த உணவு போல...
இது போல அன்பை அள்ளிக்கொடுத்த அன்பு உள்ளம் கொண்ட அக்காவிற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
திரு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக