கடந்த வருடம் முழுதும் என்னை கண்ணின் மணி போல காத்து, வழிநடத்திய இறைவனுக்கு நன்றி சொல்ல விழைகிறேன்.
இனி வரும் நாட்களிலும் என்னுடன் இருந்து, என்னை வழி நடத்தப் போவதற்கும் நன்றி சொல்ல ஆசை....
கடந்த வருடத்தில் நான் எடுத்த முயற்சி தான் ' தினமும் வலைப்பதிவு செய்வது '.
மூன்று நாட்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் எழுத முடியவில்லை. அந்த அளவிற்கு என்னை வழிநடத்திய அவருக்கு நன்றி....
இது அடுத்த வருடமும் தொடர முயற்சிக்கிறேன்.
இந்த வருடம் ' என்னால் எல்லோருக்கும் ஆசிர்வாதம் மட்டும் கிடைக்க வேண்டும்' என்று விரும்புகிறேன்.
அது மட்டும் அல்லாமல் ' என்னால் முடிந்த அளவு முக மலர்ச்சி உடன் என்றும் இருக்க ஆசை படுகிறேன்'.
இறைவன் அருள் என்றும் நம்மோடு....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனிய பாரதி.