நமக்குப் பிடித்த ஒரு பொருள்
நம் நண்பரோ
அண்டை வீட்டாரோ
வாங்கி
அதைப் பயன்படுத்தும் போது
நமக்கு எரிச்சல் வரும்!
சில சமயங்களில்
நாம் அணிந்திருக்கும்
அதே மாதிரியான ஆடையை
வேறொருவர் அணிந்திருக்கக் கண்டு
வெகுண்டெழுவோம்!
நாம் முதலிடம் பிடிக்கத்துடிக்கும்
இடத்தில்
வேறொருவர் இருக்கிறார்
என்று நினைக்கும் போது
அவர் மீது பொறாமைப்படுவோம்!
என்னுடையது எல்லாம் என்னுடையதே!
மற்றவருடையதும் என்னுடையதே என்ற
மனநிலையை என்னிடமிருந்து நீக்க
வரம் தா இறைவா!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக